தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -4


1. யாகங்களில் சிறந்தது எது?
2.
விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?
3.
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் உள்ள சக்தியுள்ள கோவில் எது?
4.
துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
5.
முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?

பதில்கள்:
1.
அஸ்வமேத யாகம்

2.
ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)

3.
வைஷ்ணவி ஆலயம் என்று படித்தேன். 'கூகிலில்' தேடினால் அப்படியொரு கோவிலைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதே ஊரில் துர்கை ஆலயம் சக்தி வாய்ந்த ஒன்று எனக் கண்டறிந்தேன். அவை இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்.

4.
துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.
ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.
ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.
ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.

5.
முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.